ஒரு குறுந்தட்டில் 10 நாவல்கள்,75 சிறுகதைகள்
அமரர் கல்கியின் புகழ்பெற்ற நாவல்களான பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, அலைஓசை, தியாகபூமி உள்ளிட்ட 10 நாவல்களையும், அவரது 75 சிறுகதைகளையும் ஒரு குறுந்தட்டாகப் பதிப்பித்திருக்கிறது சென்னையில் உள்ள ஒரு நிறுவனம்.
இடப் பிரசினை காரணமாக வீடுகளில் புத்தகமாக சேமிக்க முடியாதவர்களுக்கும், வேலை நிமித்தமாக ஊர் விட்டு ஊர் போகிறவர்களுக்கும், அஞ்சல் மூலம் நூல்களைத் தருவிப்பது சிரமமானதாகக் கருதும் அயல்நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் இது வசதியனதுதான். இப்போதெல்லாம் நூல்கள் யானை விலை, குதிரை விலை என்று நினைப்பவர்களுகம் கூட இதை விரும்பக் கூடும் ( இத்தனை நூல்கள் கொண்ட குறுந்தகடின் விலை ரூ.199) ஆனால் நடந்து முடிந்த புத்தகக் கண்காட்சியில் பொன்னியின் செல்வன் 110 ரூபாய்க்கு விற்கப்பட்டது ( நக்கீரன் ஸ்டாலில்) அவர்கள் இணைய வசதி இருந்தால் பொன்னியின் செல்வனை இலவசமாகவே மதுரைத் திட்டத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆனால் நான் அறிந்து கொள்ள விரும்புவது வேறு. மணியம் அவர்களின் ஓவியம் இல்லாமல் பொன்னியன் செல்ல்வனை வெறும் உரைக் கோப்பாக வாசிப்பது அவருடைய ஓவியங்களுடன் வாசிப்பதைப் போன்ற அனுபவத்தைத் தருமா? நந்தினி, பூங்குழலி, பெரிய பழுவேட்டரையர், ஆழ்வார்க்கடியான் எல்லோரும் மனச் சித்திரமாகப் பதிந்து கிடக்கிறார்கள். அதனால் அந்தப் பாத்திரங்களின் உரையாடல்களைப் படிக்கும்போது அவை ' பேசுவது' போல ஓரு பிம்பம் கிடைக்கும். அது இதில் கிடைக்குமா? அல்லது இது போன்ற பிரமைகள் கல்கியில் தொடர்கதையாக, அல்லது கல்கியின் பைண்ட் வால்யூம்களில், படிக்காத, நேரடியாகப் புத்தகமாகப் படித்தவ்ர்களுக்கு ஏற்படாதா?
இது போன்ற அனுபவம் பொன்னியின் செல்வனுக்கு மட்டும்தானா? அல்ல்து மற்ற கதைகளைப் படிக்கும் போதும் ஏற்படுவதுண்டா?
( நான் படித்த புத்தகம் பற்றிய அறிமுகம் அடுத்த பதிவில், நாளை)
Tuesday, January 25, 2005
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad.
0 Comments:
Post a Comment
<< Home